உள்ளூர் செய்திகள்

சுங்கான்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் எலக்ட்ரிசியன் சாவு

Published On 2023-04-12 12:25 IST   |   Update On 2023-04-12 12:25:00 IST
  • எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்
  • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி :

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ,சிவன் கோவில் தெருவை சேர்ந்த வர் சுதிகிருஷ்ணன் (வயது 60), எலக்ட்ரீசியன்.

இவர் கடந்த 1-ந் தேதி மதியம் நாகர்கோவிலில் இருந்து வில்லுக்குறி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். சுங்கான்கடை அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த சுதி கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர் கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுதிகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்தார். சம்பவம் குறித்து அவரது உறவினர் ஆறுமுகம் (45) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News