உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் தி.மு.க. பூத் நிர்வாகிகள் கூட்டம்

Published On 2023-09-26 12:26 IST   |   Update On 2023-09-26 12:26:00 IST
  • மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
  • பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆரல்வாய்மொழி :

ஆரல்வாய்மொழி நகர தி.மு.க. சார்பாக பூத் நிர்வாகிகள் கூட்டம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒன்றிய சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜோசப், ஒன்றிய செயலாளர் செல்வன், தலைமை கழக பேச்சாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் அகஸ்டின், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் முருகன் சதீஷ்குமார், ராஜபாபு, சந்திரன், சேதுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News