உள்ளூர் செய்திகள்

நெல்லை சரக டி.ஐ.ஜி ஆய்வு

Published On 2022-07-26 09:17 GMT   |   Update On 2022-07-26 09:17 GMT
  • கைரேகை பிரிவு, புகைப்பட பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு
  • பூதப்பாண்டியில் சிறுவன் குளத்தில் விழுந்து மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு

நாகர்கோவில் :

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் இன்று குமரி மாவட்டம் வந்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் கைரேகை பிரிவு, புகைப்பட பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு நடத்தினார்.

முன்னதாக பூதப்பாண்டியில் சிறுவன் குளத்தில் விழுந்து மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News