உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

முஞ்சிறை யூனியன் தலைவருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-11-10 07:11 GMT   |   Update On 2022-11-10 07:11 GMT
  • காண்டிராக்டர் மீது வழக்கு
  • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி.

இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில சாலை பணி களை காப்புக்காடு பகுதி கோணத்து விளையை சேர்ந்த பிரிங்கோ ஸ்டான்லி (வயது 35) என்பவர் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.

இதில் குறிப்பிட்ட சாலை பணிகளை 2 மாதத்தில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட சாலை பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்காதது குறித்து தலைவர் ராஜேஸ்வரி, ஒப்பந்ததாரரிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர் ஸ்டான்லி, நேற்று தலை வரின் அறைக்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் சுனில்குமார், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News