உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே மண் எடுத்ததால் வீடுகள் சேதம் - ஒருவர் மீது வழக்கு

Published On 2022-11-09 07:57 GMT   |   Update On 2022-11-09 07:57 GMT
  • தனது நிலத்தில் கட்டுமான பணிக்காக மண் அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தார்
  • இதில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன், அதில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது.

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே மறு கண்டான் விளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் கட்டுமான பணிக்காக மண் அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் அரசின் அனுமதியை மீறி அதிக அளவில் மண் அகற்றியதாக கூறப்படுகிறது. இதில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன், அதில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளாத்துறை கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News