உள்ளூர் செய்திகள்
குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்
- குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி நடந்தது
- போராட்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட் பட்ட 4-வது வார்டு இடைவளாகம் காலனி சாலை, இடவிளாகம்-சி.எஸ்.ஐ. சபை சாலை, மிட்டல், வள்ளி கோடு, அம்பலத்துவிளை ஆகிய சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.பிரிவு மாநில துணை தலைவர் ஜோஸ்லால் தலைமையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.