உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே பாதை பிரச்சினையில் மோதல்; சகோதரர்கள் மீது வழக்கு

Published On 2023-08-19 07:52 GMT   |   Update On 2023-08-19 07:52 GMT
  • தாய் தந்தையரின் சமாதிகளுக்கு செல்லும் பாதை சம்மந்தமான பிரச்சினையில் முன் விரோதம்
  • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது55). இவர் விவசாயி. இவரது சகோதரர் குமரேசன் (65) என்பவர் இந்திய மணல் ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது மேற்கு நெய்யூர் பகுதியில் வசித்து வருகிறார். இன்னொரு சகோதரர் விஜய ராஜ் (62) என்பவர் சென்னையில் ஒரு பிரபல கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது எறும்புக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கிடையே இவர்களின் தாய் தந்தையரின் சமாதிகளுக்கு செல்லும் பாதை சம்மந்தமான பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜனை அவரது அண்ணன்களான குமரேசன், விஜயராஜ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆசா பத்திரியில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News