உள்ளூர் செய்திகள்

குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

Published On 2023-11-19 07:14 GMT   |   Update On 2023-11-19 07:14 GMT
  • பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார்
  • முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு

திருவட்டார், நவ.19-

குமரி மாவட்டம் குலசே கரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவி சுகிர்தா தற்கொலை செய்துகொண் டார்.

இவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் பேராசிரியர் பரமசிவன் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பானது குலசே கரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாண வர்களின் போராட்டம் எதிரொலியாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட் டது.

இதில் டாக்டர் பரமசிவன் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 2 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி நேரடியாக விசாரித்தனர். இவர்களும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து விசாரித்தனர். கல்லூரி நிர்வாகத்தின ரிடமும் கிடுக்கிப்பிடி விசா ரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு சம்மந்தமாக இதுவரை சுமார் 70 பேரிடம் விசாரணை செய்துள்ளனர்.

Tags:    

Similar News