உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய புகாரில் 3 பேர் மீது வழக்கு

Published On 2022-06-16 07:37 GMT   |   Update On 2022-06-16 07:37 GMT
  • இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை
  • செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்துவதாக வந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த மினி வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி னர். டிரைவர் தப்பி ஓடி விட்ட நிலையில் போலீசார் வேனை சோதனை செய்த போது அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மினி வேனையும் பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிதறால் செல்வராஜ். பத்துகாணி வினோத், மடிச்சல் திலீப் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News