உள்ளூர் செய்திகள்

மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

நாகர்கோவிலில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

Published On 2022-11-23 11:03 GMT   |   Update On 2022-11-23 11:06 GMT
  • கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • சாலையோரம் குப்பை கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

நாகர்கோவில்:

நாகர்கோவில் 15- வது வார்டு பகுதியில் மேயர் மகேஷ் தெரு, தெருவாக நடந்து ஆய்வு மேற்கொண்டார் .

அவர் அந்த வார்டு பகுதியில் உள்ள ஹென்றி ரோடு, புது குடியிருப்பு, தேவ சகாயம் தெரு , ரேச்சல் தெரு, காமராஜபுரம், எம்.எஸ்.ரோடு, குமரி காலனி, பரமதெரு , புதுக்குடியிருப்பு, சாஸ்தான் கோவில்தெரு, டிஸ்டிலரி ரோடு , டிஸ்டிலரி அப்ரோச் ரோடு ஆகிய பகுதியில் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது வெட்டூர்ணி மடம் கால்வா யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். சாலையோரம் குப்பை கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

மேலும் குப்பைகளை தரம்பிரித்து தூய்மை பணியாள ரிடம் வழங்க வேண்டும் எனவும் , ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் கொடுத்த னர்.

அதனை மேயர் மகேஷ் வாங்கிக்கொண்டு விரைவில் செய்துகொடுக்கப்படும் என உறுதி அளித்தார் . ஆய்வின்போது நிர்வாக அதிகாரி ராமமோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செய லாளர் வக்கீல் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன்,கவுன்சிலர் லீலாபாய், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்பட பலர் உடன் சென்றனர்

Tags:    

Similar News