உள்ளூர் செய்திகள்

ஹோலிகிராஸ் கல்லூரியில் ரத்ததான முகாம்

Published On 2023-07-27 08:46 GMT   |   Update On 2023-07-27 08:46 GMT
  • மாணவிகளுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
  • முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.

நாசர்கோவில் :

நாசர்கோவில் ஹோலிகிராஸ் (தன்னாட்சி) கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. பத்மனாப்புரம் அரசு தலைமை மருத்துவமனை ரத்த மைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாஸ்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி முதல்வர் சகாயசெல்வி வாழ்த்துரை வழங்கினார். கிறிஸ்துதாஸ் வில்லியம்ஸ், மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மாணவிகளுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

சகாய செல்வராஜன், ரத்ததான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரசன் கேப்ரீனா மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து முகாமை வழிநடத்தினர். இதில் மாவட்ட ரத்ததான கழக தலைவர் நாஞ்சில் ராஜ், கல்லூரி தாளாளர் மேரி ஹில்டா, உதவி முதல்வர்கள் லீமா ரோஸ், சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர். ஹோலிகிராஸ் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெபிஜா மின்னி, பேராசிரியை கிரேசிலின் லிடியா மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்ததானம் வழங்கினர்.

Tags:    

Similar News