உள்ளூர் செய்திகள்
திங்கள் நகர் பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும்
- 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிட வேண்டும்
கன்னியாகுமரி:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிடவும், 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிடவும், 4 சதவீதம் டி.ஏ. உயர்வை வழங்கவும், நீதிமன்றம் உத்தரவு படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை வலியுறுத்தி திங்கள் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளை தலைவர் மணி கண்டன் தலைமை தாங்கி னார். அமைப்பாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னராக மாவட்ட அமைப்பா ளர் குமாரதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சி யின் மாவட்ட பொது செயலாளர் ராஜா, மணி மகேஷ்வர பிள்ளை சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் விஜயன் நன்றி கூறினார்.