உள்ளூர் செய்திகள்

வெள்ளி இமயகிரி வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

Published On 2023-10-22 11:56 IST   |   Update On 2023-10-22 11:56:00 IST
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • வெள்ளி இமயகிரி வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 7-ம் திருவிழாவான நேற்று இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இமயகிரி வாக னத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி இமயகிரி வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜை யும் ஏகாந்த தீபாராதனை யும் நடந்தது.

8-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பொதுப் பணித்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும் அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரையும்நடக்கிறது. இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு வெள்ளிக்கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி யும் நடக்கிறது.

Tags:    

Similar News