கொட்டாரம்-கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர் - வாலிபர் தற்கொலை
- வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
- விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தார்.
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதி பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவரது தாய், தந்தையர்கள் இறந்து விட்டதால் இவர் மட்டும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அந்த பகுதியில் உள்ள வர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் மீனாட்சி புரம் கட்ட பொம்மன் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 24). இவர் மெடிக்கல் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தனது மருத்துவ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் தங்குவதற்காக ஒரு அறை வேண்டும் என்று கேட்டு அந்த அறையில் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறை நேற்று மாலை வரை வெகு நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதனால் அந்த லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கன்னியா குமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அவர் தங்கி இருந்த அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அந்த அறையில் தங்கி இருந்த விஜயகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தார்.
இதைத்தொடர்ந்து போலீ சார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்த விஜயகுமார் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.