உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி

Published On 2023-11-25 07:05 GMT   |   Update On 2023-11-25 07:05 GMT
  • வீட்டில் யாரும் இல்லாத நிலையில், லாரன்ஸ் தினமும் விளக்குகளை போட்டு அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
  • வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தக்கலை :

தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 80), தொழில் அதிபர். இவரது மகள் வெளியூரில் வசித்து வருகிறார்.

அவருக்குச் சொந்தமான வீடு கவியலூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர் பராமரித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், லாரன்ஸ் தினமும் விளக்குகளை போட்டு அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை அவர், வழக்கம் போல் விளக்குகளை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவர் அங்கு வந்த போது, வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தொழில் அதிபர் பொன்னையாவுக்கு அவர் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விட்டு தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மெயின் கேட் கதவின் பூட்டு மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் யாரும் செல்ல வில்லை என விசாரணை யில் தெரியவந்தது. இருப்பி னும் பூட்டை உடைத்தது யார்? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News