உள்ளூர் செய்திகள்

மாங்கரையில் ரூ.11.50 லட்சத்தில் அங்கன்வாடி புதிய கட்டிடம்

Published On 2023-09-17 07:05 GMT   |   Update On 2023-09-17 07:05 GMT
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

மார்த்தாண்டம் :

கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆல்பர்ட் ஜெனில், முன்னாள் கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிளைமெண்ட் பிரேம்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News