உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கொரியர் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-25 08:39 GMT   |   Update On 2023-05-25 08:39 GMT
  • மனைவி இறந்த தினத்தில் சோகம்
  • கடந்த 2 நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார்.

நாகர்கோவில் :

சுசீந்திரம் அருகே உள்ள தேவர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பி கண்ணன் (வயது 52). இவர் தற்போது ராணி தோட்டம் வடக்கு தெருவில் வசித்து வந்தார்.

இவரது மனைவி ஜூலியட் கில்டா. இவர்க ளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜூலியட் கில்டா இறந்து விட்டார். அதன் பிறகு தம்பிக்கண்ணன் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி யின் ஓராண்டு நினைவு தினம் இன்று வருவதை யடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார். மனைவி இறந்த தை நினைத்து தினமும் புலம்பிக் கொண்டிருந்தார். தம்பிகண்ணனை உறவி னர்கள் சமாதானம் செய்தனர்.

கடந்த 2 நாட்களாக அவர் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தம்பி கண்ணன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தம்பி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி இறந்த தினத்தில் கணவர் தறங கொலை செய்து கொண்ட சம்பவம் உறவி னர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News