உள்ளூர் செய்திகள்

அருமனை அருகே பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Published On 2022-07-20 12:39 IST   |   Update On 2022-07-20 12:39:00 IST
  • தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
  • தலை மறைவாக இருந்த ஜெரின் நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் அருமனை வலியவிளையை சேர்ந்தவர் ஜெரின் (வயது22).

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரம் புகுந்து உள்ளார். அங்கு தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் ஜெரின் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலை மறைவாக இருந்த ஜெரின் நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News