நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை
- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
- நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 26). இவர் மாணவியை காதலிப்பதாக கூறி அவருக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார். மாணவி பள்ளிக்கு செல்லும்போதும் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்தார். தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியை தாக்கியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் மாணவி யின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளி யிடுவதாக ஜெயராம் மிரட்டி னார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.
இதையடுத்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயராமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.