உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் அதிக அளவில் மது குடித்த கொத்தனார் திடீர் சாவு

Published On 2023-11-19 07:42 GMT   |   Update On 2023-11-19 07:42 GMT
  • சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார்.
  • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை, நவ.19-

மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன் கொடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழும்பவில்லை.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது விஜயன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News