உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த பெண்

Published On 2023-07-30 13:08 IST   |   Update On 2023-07-30 13:08:00 IST
  • போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
  • நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அந்த பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

விசாரணையில் அவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால் அவரை அங்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் அந்த பெண் அங்கிருந்து செல்லாமல் பஸ் நிலையத்தில் சுற்றி வந்தார். பஸ் நிலையத்தில் பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வடசேரி போலீசார் அந்த பெண்ணை ரெயில் மூலமாக திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு வந்ததும் அதில் அந்த பெண்ணை ஏற்றி வைப்பதற்காக அவரை அழைத்து வந்தனர்.

ஆனால் ரெயில் நிலையத்திற்கு வர மறுப்பு தெரிவித்த அந்த பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு வழியாக குண்டுகட்டாக தூக்கி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட் பாரத்திற்கு கொண்டு வந்ததும் அந்த பெண் பிளாட்பாரத்தில் உருண்டு புரண்டு ரகளை செய்தார்.

போதை தலைக்கேறியதால் அந்த பெண் செய்வது என்ன என்று தெரியாமலேயே இருந்தார்.

இதை பார்த்த ரெயில் பயணிகள் முகம் சுழித்த னர். ஒரு வழியாக அந்த பெண்ணை ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பெண் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குடி போதை யில் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News