உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் அருகே குளத்தில் மேய்ந்த பசுமாடு சகதியில் சிக்கி உயிருக்கு போராட்டம்

Published On 2023-06-19 08:49 GMT   |   Update On 2023-06-19 08:49 GMT
  • குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீர் என்று சகதியில் சிக்கிக் கொண்டது.
  • சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கட்டி மீட்டனர்.

கன்னியாகுமரி :

கொட்டாரம் அருகே நாடான்குளம் பகுதியில் பன்ணிகுண்டு குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் கால்நடைகள் அடிக்கடி இறங்குவது வழக்கம். சம்பவத்தன்று குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீர் என்று சகதியில் சிக்கிக் கொண்டது. அதில் இருந்து வெளியே வரமுடியாமல் அந்த பசு, பல மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் குளத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சகதியில் சிக்கிய அந்த பசுமாட்டை தீயணைக்கும் படை வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கட்டி மீட்டனர்.

Tags:    

Similar News