உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

Published On 2023-07-27 12:24 IST   |   Update On 2023-07-27 12:24:00 IST
  • மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள்சந்தை சென்ற அரசு பஸ்சில் பயணித்தார்.
  • படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி :

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஜோசப்ராஜ் (வயது 60). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள்சந்தை சென்ற அரசு பஸ்சில் பயணித்தார்.

பஸ் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் பின் பகுதியில் இருந்து முன் பக்கத்திற்கு செல்ல முயன்றார். அப்போது பஸ்சின் படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண் ஜோசப் ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News