உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் அட்டகாசம் செய்த 46 குரங்குகள் சிக்கியது

Published On 2023-07-31 09:16 GMT   |   Update On 2023-07-31 09:16 GMT
  • வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
  • மாலைமலர் செய்தி எதிரொலி

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி மற்றும் தேவ சகாயம் மவுண்ட் தேவாலயம் பகுதிகளில் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குரங்குகள் தொல்லை அதிகரிப்பது குறித்தும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

வனத்துறையினர் அசோக், துரைராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் குரங்குகள் சிக்கியது. ஒரே நாளில் 46 குரங்குகள் சிக்கி உள்ளது. பிடிப்பட்ட குரங்குகளை அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News