உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2022-06-05 07:53 GMT   |   Update On 2022-06-05 07:53 GMT
  • குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:


குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அதிவேகமாக 2 இருசக்கர வாகணத்தில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதனால் வாகனத்தை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), பிரவின் (23),வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என தெரிய வந்தது.

இதில் ஆகாஷ், பிரவின் மீது ஏற்கனவே தக்கலை காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. எங்கு இருந்து கஞ்சா வருகிறது? யார் மூலம் சப்ளை செய்து வருகிறார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News