குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை
- தொழிலாளர் நல அதிகாரி எச்சரிக்கை
- குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மின்னணு மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தி னர் பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்களா? என்று நாகர்கோவில் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகி யோருடன் நடத்தப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்க ளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும். குழந்தை தொழிலா ளர்களை பணியில் அமர்த்து வது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிலோ, 04652-229077 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.