நாகர்கோவில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த தங்க நகையை படத்தில் காணலாம்
நாகர்கோவில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகை
- பயணிகள் எடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
- ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய த்துக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதன்பிறகு ரெயில் புறப்பட்டு கன்னியா குமரி சென்றது.
இந்த நிலையில் பயணிகள் இறங்கி சென்ற முதலாவது பிளாட்பாரத்தில் 2 பவுன் தங்க நகை கிடந்தது. இதைப் பார்த்த சக பயணிகள் உடனே நகையை மீட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வர்களிடம் விசாரித்தனர். ஆனால் நகைக்கு யாரும் உரியை கோர வில்லை.
இதனையடுத்து நகையை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
நகையை தவற விட்ட வர்கள் நகையின் அடையா ளங்களை தெரிவித்து பெற்றுச் செல்லுமாறு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.