உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலுக்கு 1250 டன் ரேசன் அரிசி சரக்கு ரெயிலில் வந்தது
- 21 வேகன்களில் சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி
- தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப் படுகிறது. ஆந்திராவில் இருந்து 21 வேகன்களில் சரக்கு ரெயிலில் 1250 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சரக்கு ரெயிலில் இருந்து ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அரிசி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது