உள்ளூர் செய்திகள்

ஆஞ்சநேயருக்கு முழு உருவ பஞ்சலோக அங்கிசாத்தி 1008 வடை மாலை அணிவித்து மலர்களால் அலங்கரிக் கப்பட்டு இருந்ததையும் பக்தர்கள் வழிபடுவதையும் படத்தில் காணலாம்.

கொட்டாரம் ராமர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை அணிவித்து வழிபாடு

Published On 2022-10-16 12:56 IST   |   Update On 2022-10-16 12:56:00 IST
  • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது.
  • இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி கோவி லில் உள்ள சர்வ சித்தி வலம்புரிவெற்றிவிநாயகர், மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள ராம பெரு மான், அதன் எதிரே அமைந்து உள்ள 9 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோருக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, மா பொடி, களபம், சந்தனம், விபூதி, குங்குமம், மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம்நடந்தது.

அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் ராமபிரா னுக்கு வெள்ளிஅங்கி சாத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆஞ்சநேயருக்கு முழு உருவ பஞ்சலோக அங்கிசாத்தி 1008 வடை மாலை அணிவித்து மலர்களால் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. சர்வ சித்தி வலம்புரி வெற்றி விநாயகருக்கும் மலர்களால் அலங்காரம்செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் இரவு 7.30 மணிக்கு சர்வ சித்தி வலம்புரி வெற்றி விநாயகர், ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும், அலங்கார தீபாரதனையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்தி ரன் தொடங்கி வைத்தார். செயலாளர் ஏ.பி.முத்து, துணைத்தலைவர் ராஜகோபால், மேற்கு குழு உறுப்பினர் அய்யம் பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News