உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

ஆசாரிபள்ளத்தில் மொபட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு

Published On 2022-12-19 10:08 GMT   |   Update On 2022-12-19 10:08 GMT
  • சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
  • போலீசார் தொடர்ந்து விசாரணை

நாகர்கோவில்:

ஆசாரிபள்ளம் பெரு விளை சானல் கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.

இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர் தனது மொபட்டை பக்கத்து வீட்டில் உள்ள காம்பவுண்டுக்குள் நிறுத்துவது வழக்கம். சம்பவத்தன்றும் மொபட்டை அங்கு நிறுத்தி இருந்தார்.

அப்போது மொபட்டில் அவரது கணவர் வெளி நாட்டிலிருந்து அனுப்பிய ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து இருந்தார். மறுநாள் காலையில் மொபட்டை பார்த்தபோது அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருந் தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் பணம் கிடைக்க வில்லை. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தினார்கள்.சம்பவ இடத்திற்கு வந்தும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திருட்டு வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தொடர்பு இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News