உள்ளூர் செய்திகள்
ஆன்றோ வினி
குளச்சலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
- மேற்கு அலை தடுப்பு சுவர் பகுதி சாலையில் செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் ஏசுதாஸ் காலனியை சேர்ந்தவர் ஆன்றோ வினி (வயது 47). இவர் விசைப்பட குகளுக்கு டீசல் நிரப்பும் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந்தேதி இரவு இவர் மோட்டார் சைக்கிளில் குளச்சல் துறை முக பகுதிக்கு சென்றார். மேற்கு அலை தடுப்பு சுவர் பகுதி சாலையில் செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார்.அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலிலில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். பலியான தொழி லாளி ஆன்றோ வினிக்கு குயின் ஜெமி என்ற மனைவி யும், 1 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.