உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவட்டார் அருகே எலக்ட்ரீசியன் மீது தாக்குதல்

Published On 2022-12-13 08:41 GMT   |   Update On 2022-12-13 08:41 GMT
  • முன்விரோதம் காரணமாக அனிஷ்குமாரை சுந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் முத்துபிள்ளை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
  • திருவட்டார் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே இடக்குடிவிளை, முதலார் செங்கோடி பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார் (வயது 30), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (38). இவரது நண்பர் முத்து பிள்ளை. இந்நிலையில் சுமார் 1 வருடத்திற்கு முன்பிலிருந்து அனிஷ் குமாருக்கும், சுந்தர் சிங்குக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று அனிஷ்குமார் எலக்ட்ரிக்கல் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை சுந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் முத்துபிள்ளை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த அனிஷ்குமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அனிஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் சுந்தர்சிங், முத்து பிள்ளை 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருவட்டார் போலீசார் சுந்தர்சிங், முத்து பிள்ளை 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News