உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணையை படத்தில் காணலாம் 

குளச்சலில் 520 லிட்டர் மண்எண்ணையுடன் ஆட்டோ பறிமுதல்

Published On 2023-01-22 10:03 GMT   |   Update On 2023-01-22 10:03 GMT

    கன்னியாகுமரி:

    தக்கலைவட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி யளவில் கல்குளம் வட்டம், குளச்சல் அருகே யுள்ள லியோன் நகர் சுனாமி காலனியில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

    அப்போது பயணிகள் ஆட்டோ நூதன முறையில் வடிவமைக்கப்பட்டு அங்கு வந்தது. அதனை சந்தேகத்தின் அடிப்படையில்போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் சுமார் 420 லிட்டர் வெள்ளை நிற மானிய விலை மண்எண்ணை (மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்துவதற்கு மானிய விலையில் மீன் வளத்துறை மூலமாக வழங்கப்படும் மண்எண்ணை) இருந்தது. அதனை வாகனத்துடன் போலீ சார் பறிமுதல் செய்த னர்.

    மேலும் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் லாரி குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட மண்எண்ணை குளச்சல் கிட்டங்கியில் நாளை ஒப்படைக்கப்படுகிறது.

    ஆட்டோ தக்கலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

    Tags:    

    Similar News