உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

Published On 2023-01-03 13:22 IST   |   Update On 2023-01-03 13:22:00 IST
  • பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
  • போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஜெரோம்எடிசன் (வயத 38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் சிலுவைராஜிக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று கொன்ன குழிவிளை ஆலயத்தின் புத்தாண்டு ஆராதனையில் ஜெரோம்எடிசன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த சிலுவைராஜ், இவரது மகன் ரினோ, பவுல் ஆகியோர் ஜெரோம் எடிசனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஜெரோம்எடிசனை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஜெரோம்எடிசன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News