உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம் - இன்று மாலை நடக்கிறது

Published On 2023-11-13 10:51 GMT   |   Update On 2023-11-13 10:51 GMT
  • முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடிேயற்றுத்துடன் தொடங்கியது.
  • பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் : 

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடிேயற்றுத்துடன் தொடங்கியது.

திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா ெதாடங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், சிவன்மலை கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோவில், அலகுமலை கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று மாலை கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் பக்தர்கள் காப்பு அணிந்து தங்களது விரதத்தை தொடங்குகின்றனர். 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. அதுவரை தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.   

Tags:    

Similar News