உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்ற மாணவியை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் பாராட்டினார். 

காமராஜர் பிறந்த தின பேச்சுப்போட்டியில் சேரன்மகாதேவி அரசு பள்ளி மாணவி 2-ம் இடம்

Published On 2022-07-28 09:32 GMT   |   Update On 2022-07-28 09:32 GMT
  • காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடந்தது.
  • பேச்சு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சேரன்மகாதேவி:

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் என்.எம்.எக்ஸ். அகாடமியும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும் இணைந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி வசுந்தரா 2-ம் இடத்தை பிடித்து விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவருக்கு அதற்கான தகுதி சான்றும், ரூ.1,500 ரொக்கப்பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

மாணவியை சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் தலைமை ஆசிரியர் மரகதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் நெய்னா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவி சரிதாதேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியை பாராட்டினர்.

Tags:    

Similar News