உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைக்கு இந்து முன்னணி காரணம் என கூறி அவதூறு பரப்பியவர்கள் மீது புகார்

Published On 2022-07-19 08:00 GMT   |   Update On 2022-07-19 08:00 GMT
  • கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைக்கு இந்து முன்னணி காரணம் என கூறி அவதூறு பரப்பியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
  • இந்து முன்னணி மாநில தலைவரின் படத்தை தவறாக சித்தரித்து உள்ளனர்.

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து போராட்டம் நடந்தது.  இந்த வன்முறைக்கு இந்து முன்னணி தான் காரணம் எனவும் இந்து முண்ணனி பேரியக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்து முன்னணி மாநில தலைவரின் படத்தை தவறாக சித்தரித்து திருவெண்ணைநல்லூரை மையமாகக் கொண்டு செயல்படும் மக்களின் உண்மை செய்திகள் வாட்ஸ்-அப் குழுவில் பதிவு செய்தவர் மீதும் போஸ்டரை உருவாக்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் அப்பு என்கிற சதீஷ் தலைமையில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், ஒன்றிய பொதுச்செயலாளர் அழகேசன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய செய்தி தொடர்பாளர் ரஞ்சித், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பத்ராசலம், ராஜி, மற்றும் வெங்கடேசன், செல்வராஜ் கிளை பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News