உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்தையொட்டி கலச யாத்திரை

Published On 2023-02-22 15:07 IST   |   Update On 2023-02-22 15:07:00 IST
  • அம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.
  • மார்வாடி சமூக மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சீர்வி சமாஜம் சார்பில் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவில் அருகே நியூ பாலாஜி நகரில், மாதாஜி அம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று, ஓசூர் காமராஜ் காலனியில் இருந்து மாதாஜி அம்பாள் கோவில் வரை கலச யாத்திரை நடைபெற்றது.

இதில் 5,000 -க்கும் மேற்பட்ட மார்வாடி சமூக மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர். இதனால் அந்த பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News