ஆனி திருவிழாவையொட்டி ஆறுமுகநேரி சிவன் கோவிலில் கால் நாட்டு விழா
- ஆனி திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
- கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்த கால் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பா ளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆனி திருவிழா விற்கான முகூர்த்த கால் நாட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதற்கான விழாவை ஆலய அர்ச்சகர் அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில் கோவில் மணியம் சுப்பையா, பக்தஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், பூபால் ராஜன், அசோக்குமார், இளைய பெருமாள், ஆன்மீக திருச்சபை நிர்வாகி சுப்பையா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜை ஏற்பாடுகளை ஆலய வழிபாட்டு மகளிர் குழுவினர் செய்திருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், சுவாமி- அம்பாளுக்கு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.