உள்ளூர் செய்திகள்

கரூரில் அனுமதியின்றி மது விற்ற 6 பேர் கைது

Published On 2022-11-06 08:53 GMT   |   Update On 2022-11-06 08:53 GMT
  • கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., அழகுராம் தலைமையில் போலீசார், தென்னிலை வாங்கல், சின்னதாராபுரம், பால விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
  • அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்ற 6 பேரை கைது செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில் விற்றதாக 8 பேரை போலீசர் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., அழகுராம், பாலவிடுதி எஸ்.ஐ., தர்மலிங்கம் உள்ளிட்ட போலீசார், தென்னிலை வாங்கல், சின்னதாராபுரம், பால விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்

அப்போது. சட்ட விரோதமாக மதுபாட்டில்களை, விற்பனை செய்ததாக சண்முகம், ரவி, அன்பழகன், மாரியம்மாள், பாஸ்கர், புகழேந்தி ஆகிய 8பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News