உள்ளூர் செய்திகள்

சிறப்பு யாகம் வளர்த்து வழிபட்ட ஜப்பான் நாட்டினர்.

வள்ளலார்கோவிலில் ஜப்பான் நாட்டினர் வழிபாடு

Published On 2023-03-05 14:51 IST   |   Update On 2023-03-05 14:51:00 IST
  • 136 மூலிகை பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
  • புனிதநீர் கொண்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தரங்கம்பாடி:

சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து, 5 சிவன் ஆலயமும், ஆறுபடை வீடுகளான 6 முருகன் கோவில்களும் ஜப்பான் நாட்டில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

அதன் பயணமாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 19 பெண்கள், 21ஆண்கள் என 41 பேர் ஜப்பான் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி என்கிற தகாயுகி ஹோஷி தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு சைவ கோவில்களில் யாகம் செய்து சிவவழிபாடும், ஆறுபடை வீடுகளான 6 முருகன் கோவில்களில் யாகம் செய்து வழிபட்டு 9 கிரக கோயில்களில் வழிப்பாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை சேந்தங்குடியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர்.

ஆலயத்தில் உள்ள குருபகவான் மேதா தட்சிணாமூர்த்திக்கு மூலமந்திர ஹோமம், ருத்திர ஜபம் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதையொட்டி, கோயில் பிரகாரத்தில், புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

பின்னர் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, புனிதநீர் கொண்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக ஜப்பானிய ஆன்மீகக் குழுவினர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முந்தைய ஆதீனகர்த்தர்கள் சித்தியடைந்துள்ள ஆனந்தபரவசர பூங்காவில் உள்ள சமாதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஜப்பான் தொழிலதிபர் சுப்பிரமணியம், வைத்தீஸ்வரன் கோயில் செந்தில்குமார், தருமபுரம் கல்லூரி செயலர் செல்வநாயகம், ஏ.வி.சி. செந்தில்வேலன், கோயில் கண்காணிப்பாளர் அகோரம், யுவா ஜெயின் சங்க தலைவர் மகாவீர் ஜெயின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News