உள்ளூர் செய்திகள்

இன்று முதல் 4 நாட்கள் கன மழை பெய்யும்

Published On 2022-07-28 07:09 GMT   |   Update On 2022-07-28 07:09 GMT
  • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்கள் கன மழை பெய்யும் என வானிைல ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
  • இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று முதல் மேலும் 4 நாட்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News