உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் கடும் குளிர்

Published On 2022-11-29 10:13 GMT   |   Update On 2022-11-29 10:13 GMT
  • பொதுமக்கள் பாதிப்பு- வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
  • மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

 ஊட்டி :

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.அதேசமயம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாபயணிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஊட்டி - மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு பிறகும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

இன்று காலை வெகு நேரமாகியும் வெயில் தென்படாத நிலையில், குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News