உள்ளூர் செய்திகள்
கண்டெய்னரை தூக்கும் இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி பலி
- சடையங்குப்பத்தில் உள்ள கண்டெய்னர் சரக்கு பெட்டகத்தில் சுரேஷ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- இரும்பு கொக்கி திடீரென அறுந்து சுரேஷ் மீது விழுந்தது.
திருவொற்றியூர்:
மணலி புது நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). திருவெற்றியூர் அருகே சடையங்குப்பத்தில் உள்ள கண்டெய்னர் சரக்கு பெட்டகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர், லாரியில் இருந்து கண்டெய்னர் பெட்டியை இறக்குவதற்காக உள்ள ராட்சத எந்திரத்தின் இரும்பு சங்கிலியை சரி பார்த்தார். அப்போது அதில் இருந்த இரும்பு கொக்கி திடீரென அறுந்து சுரேஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.