உள்ளூர் செய்திகள்
கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு
- கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
- தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
பல்லடம் :
பல்லடத்தில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடைபெற்ற கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணி நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இது குறித்து பல்லடம் தாசில்தார் நந்தகோபால் கூறியதாவது:- கிராம உதவியாளர் தேர்விற்கு 306 பேர் தேர்வு எழுதினர்.
அவர்களுக்கான நேர்முகத்தேர்வு, தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. வரும் 10ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.