உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முக அடையாளம் காணும் செயலி மூலம் சந்தேக நபரிடம் விசாரணை நடத்தினார்.

முக அடையாளம் கண்டறியும் செயலி மூலம் சந்தேக நபரிடம்போலீஸ்விசாரணை

Published On 2022-10-21 08:17 GMT   |   Update On 2022-10-21 08:17 GMT
  • முக கவசம் கண்டறியும் செயலி மூலம் சோதனை நடத்தினர்.
  • முழு விவரம் உடனடியாக தெரிய வருகிறது.

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு மற்றும் போலீசார் நேற்று இரவு பண்ருட்டி ரயில் நிலையம், பண்ருட்டி பஸ் நிலையம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மாட வீதி பகுதியில் தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது- சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து முக கவசம் கண்டறியும் செயலி மூலம் சோதனை நடத்தினர். இந்த முக அடையாளம் காணும் செயலி குறித்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கூறியதாவது:- குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப்பணிகளை செவ்வனேமேற்கொள்ளவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எப்ஆர்எஸ் செயலி சந்தேக நபரின் முழு விவரம் உடனடியாக தெரிய வருவதால் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த செயலி மிகவும் உதவியாக உள்ளதுஎன்றார்.

Tags:    

Similar News