உள்ளூர் செய்திகள்

ஓசூர் சாந்தி நகர் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு அலுவலகத்தில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. 

சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

Published On 2023-03-12 15:18 IST   |   Update On 2023-03-12 15:18:00 IST
  • உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
  • முடிவில்,அங்கன்வாடி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் பார்வதி நன்றி கூறினார்.

 ஓசூர், 

ஓசூரில், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.

ஓசூர் சாந்தி நகர் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகியுமான கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி கஸ்தூரி தேவி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி மகளிர் தின கருத்துரையாற்றினார். இதில்,மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி, ஓசூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாரெட்டி,.ஆசிரியர்கள் சங்க நிர்வாகி பத்மநாபன்,அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில்,அங்கன்வாடி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் பார்வதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News