உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் கோவில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் இந்து அறநிலையத்துறையினர் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கோவில் நிலங்களை அளந்து கல்பதிக்கும் பணி தீவிரம்

Published On 2023-03-21 15:28 IST   |   Update On 2023-03-21 15:28:00 IST
  • 15.84 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, கற்கள் பதிக்கும் பணி நடந்துள்ளது.
  • மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களும் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளை அகற்றி கல் பதிக்கும் பணி தொடர்ந்து நடக்கும்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்கவும், கோவிலுக்குரிய நிலங்களை அளவீடு செய்து கற்கள் பதிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி தாசில்தார் (ஆலய நிலங்கள்) திருமுருகன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் தேசிங்குராஜன், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சர்வேயர்கள் அடங்கிய குழுவினர் கோவில் நிலங்களை அளவிட்டு கல் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தாசில்தார் திருமுருகன் கூறியதாவது:-

இதில் கிருஷ்ணகிரி அடுத்த, புலியரசி திம்மராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2.48 ஏக்கர், போலுப்பள்ளி தேடுகரகம் கோவிலுக்கு சொந்தமான, 5.20 ஏக்கர், மற்றும் போலுப்பள்ளி சாக்கியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 8.16 ஏக்கர் கோவில் நிலங்கள் உள்பட மொத்தம் 15.84 ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, கற்கள் பதிக்கும் பணி நடந்துள்ளது.

இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில் நிலங்களும் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவைகளை அகற்றி கல் பதிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News