உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கால்வாய் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Published On 2023-07-26 14:26 IST   |   Update On 2023-07-26 14:26:00 IST
  • 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

அரவேணு,

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே அங்கு உள்ள அனைத்து நீர்நிலை கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

கோத்தகிரி சிறப்பு பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் ஊழியர்கள் குமரன் காலனி, கன்னியாதேவி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News