உள்ளூர் செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-07-25 08:59 GMT   |   Update On 2022-07-25 08:59 GMT
  • மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சீர்காழி:

சீர்காழி என்.ஜி.ஓ. சங்க கட்டிடத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் சீனிவா சன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலா ஜிமு ன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தங்க.சேகர் பங்கேற்று பேசினார். கொள்ளிடம் வட்டாரத் தலைவர் சி.சேகரன் இயக்க வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஓளிவு மறைவி ன்றி நடத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்திற்கு நன்றி தெரிவிப்பது, பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறு த்துவதுஎன்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள்நிறைவேற்ற ப்பட்டன. இதில் சீர்காழி வட்டாரசெயலாளர் கண்ணன், பொருளாளர் பாண்டியன், ஒருங்கிணை ப்பாளர் ஸ்ரீரா மன், இயக்க வழிகாட்டி ராஜசேகர், தலைமை ஆசிரியர்கள் மூர்த்தி, கோவிந்தராஜ், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News